நோட்டன் பிரிட்ஜ் - லொனக் பகுதியில் நீரில் மூழ்கி காணாமற்போன இரு இளைஞர்களும் சடலமாக மீட்பு

by Staff Writer 20-09-2021 | 10:45 AM
Colombo (News 1st) ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் லொனக் பகுதியில் நீரில் மூழ்கி காணாமற்போன இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 7 மணியளவில் சடலங்கள் மீட்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். லக்‌ஷபான இராணுவ முகாம் மீட்பு குழுவினரால் சடலங்களை தேடும் பணிகள் இன்று அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தன. லொனக் பண்ணைக்கு நீரை வழங்கும் குளத்திற்கு நேற்று (19) மாலை நீராடச் சென்ற நால்வரில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பகுதியை சேர்ந்த 24 வயதான ஒருவரும் லொனக் பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவருமே இவ்வாறு காணாமல் போன நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.