கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா?

கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா?

by Staff Writer 20-09-2021 | 2:34 PM
Colombo (News 1st) தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான இயலுமை குறித்து பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டிய அனைவரும் பூரணமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் பின்னரே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.