Update: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவருக்கு பிணை

by Staff Writer 19-09-2021 | 12:22 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது