9 வௌிநாட்டு பிரஜைகள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

ஹெரோயினுடன் கைதான வௌிநாட்டு பிரஜைகள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்

by Staff Writer 18-09-2021 | 10:33 AM
Colombo (News 1st) பாரிய தொகை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட வௌிநாட்டு பிரஜைகள் 09 பேரும் கைப்பற்றப்பட்ட படகுடன் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பிராந்தியத்தில் பாரிய தொகை ஹெரோயினுடன் 9 பேரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.