சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுத்த மக்கள் சக்திக்கு திருகோணமலை - இடிமன் கிராம மக்கள் நன்றி தெரிவிப்பு

by Staff Writer 18-09-2021 | 7:53 PM
  Colombo (News 1st) சுத்தமான குடிநீரை கொடுத்து அன்றாட அவசிய தேவையை பூர்த்தி செய்த மக்கள் சக்திக்கு திருகோணமலை - இடிமன் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இடிமன் கிராம மக்கள் பல வருடங்களாக சுத்தமான குடிநீரின்றி அல்லல்பட்டு வந்தனர். உவர்த்தன்மை, பளுப்பு மற்றும் பச்சை படிந்து காணப்பட்ட நீரையே இந்த மக்கள் அருந்த வேண்டியிருந்தது. சிறு பிள்ளைகளும் பாடசாலை செல்லும் மாணவர்களும் சுத்தமான நீரின்றி பெரும் சிரமப்பட்டனர். இந்நிலையில், மக்கள் துயர் துடைக்கும் மக்கள் சக்தி சமூகப்பணி 2016 ஆம் ஆண்டு இடிமன் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுத்தது. இரண்டே மாதங்களில் குடிநீர் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு குடிநீரும் மக்களுக்கு கிடைத்தது. அதற்காக இடிமன் கிராம மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.