தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

by Chandrasekaram Chandravadani 17-09-2021 | 11:44 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (17) முற்பகல் கூடிய கொவிட் ஒழிப்பு விசேட குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.