மன்னாரில் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை

மன்னாரில் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை

by Staff Writer 15-09-2021 | 1:12 PM
Colombo (News 1st) மன்னாரில் இன்று (15) முதல் தடுப்பூசி அட்டைகள் சோதனைச்சாவடிகளில் பரிசோதிக்கப்படுகின்றன. மன்னார் மாவட்டத்தில் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் நடமாடுவதற்கும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன் தெரிவித்தார்.