20 ஆம் திகதியின் பின்னர் நாட்டை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்: சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

by Bella Dalima 14-09-2021 | 6:50 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமையின் (20) பின்னர் கட்டம் கட்டமாக நாட்டை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். சீதுவ பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்றிருந்த அவர் இதனை கூறியுள்ளார். கடந்த நான்கு வாரங்களில் கொரோனா தொற்று மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தடுப்பூசி மற்றும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நாட்டை கட்டம் கட்டமாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.