மேலும் 135கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன

மேலும் 135 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன

by Bella Dalima 14-09-2021 | 10:39 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 135 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,431 ஆக அதிகரித்துள்ளது. இந்த மரணங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் (12) பதிவானவையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 71 ஆண்களும் 64 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன், 109 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்ட 26 பேர் அடங்குகின்றனர். இதேவேளை, நேற்று 2,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை 4,87,677 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன், 1483 பேர் நேற்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் அடிப்படையில், நாட்டில் COVID தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ,14,295 ஆக அதிகரித்துள்ளது. ​தொற்றுக்குள்ளானவர்களில் 62,086 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.