பயிலுநர்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கை

அரச சேவை பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை

by Bella Dalima 14-09-2021 | 11:01 AM
Colombo (News 1st) அரச சேவைகளில் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனத்தை விரைவாக வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கத்தின் பிரதம செயலாளர் சந்தன சூரியாராச்சி குறிப்பிட்டார். இம்மாதத்துடன் பயிற்சிக்காலம் நிறைவடைவதால், உடனடியாக நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுச்சேவை அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியிடம் வினவியபோது, பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பயிலுநர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக கூறினார். நியமனம் வழங்குவதற்கு முன்னர், பதவி வெற்றிடங்கள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.