by Staff Writer 13-09-2021 | 12:03 PM
Colombo (News 1st) இன்று (13) அதிகாலை 76,000 Pfizer தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த Pfizer தடுப்பூசிகளே இன்று கொண்டுவரப்பட்டுள்ளன.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கட்டார் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.