இதுவரை 4,85,922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் இதுவரை 4,85,922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Bella Dalima 13-09-2021 | 10:51 AM
Colombo (News 1st) நாட்டில் 4,85,922 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 61,958 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 4,12,812 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே, மேலும் 144 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 11 ஆம் திகதி இந்த அனைத்து மரணங்களும் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 77 ஆண்களும் 67 பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்த 144 பேரில் 122 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். 30 தொடக்கம் 59 வயதிற்கு இடைப்பட்ட 21 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 11,296 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.