சுவிஸ் தூதரகத்திடம் ஆயர்கள் விடுத்துள்ள கோரிக்கை

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை

by Staff Writer 13-09-2021 | 7:13 PM
Colombo (News 1st) சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கிய பயணத்தில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகம் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்ததாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.