முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு

மதுரங்குளி - முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 11-09-2021 | 1:27 PM
Colombo (News 1st) புத்தளம் - மதுரங்குளி, முக்குத்தொடுவாய் - முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து சடலம் நேற்று (10) மாலை மீட்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளுக்காக சடலம் கரையோரத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஆடைகள் இன்றி மீட்கப்பட்ட குறித்த சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக நியூஸ்பெஸ்ட்  செய்தியாளர் கூறினார். முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்