by Staff Writer 10-09-2021 | 2:15 PM
Colombo (News 1st) யால தேசிய பூங்காவில் இரண்டு சஃபாரி ஜீப் வண்டிகள் மோதி விபத்துக்குள்ளாகின.
உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டியும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டியுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நேற்று (09) மாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.
விபத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணியொருவர் காயமடைந்துள்ளார்.
பூங்காவின் விதிமுறைகளை மீறும் வகையில் ஜீப் வண்டி அதிக வேகத்துடன் பயணித்தமையே இந்த விபத்திற்கான காரணம் என பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.