குளங்களில் மண் அகழ்ந்து களப்பு நிரப்பப்படுகின்றதா?

கிழக்கில் குளங்களில் மண் அகழ்ந்து களப்புகளை நிரப்புதல் தொடர்பில் அறிக்கை கோரல்

by Staff Writer 10-09-2021 | 7:54 PM
Colombo (News 1st) குளங்களில் மண்ணை அகழ்ந்து கிழக்கு மாகாணத்தில் களப்பு நிரப்பப்படும் நடவடிக்கை தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் அறிக்கையொன்றை கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திடம் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த சில பகுதிகளில் அரசியல்வாதிகளின் தலையீட்டில் களப்பு நிரப்பப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.