by Staff Writer 10-09-2021 | 1:17 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இந்த ஆண்டு நடைபெறமாட்டாது என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஆலய தலைவரும் வண்ணக்கருமாகிய பூபாலப்பிள்ளை சுரேந்திரராஜா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.