by Staff Writer 10-09-2021 | 10:30 AM
Colombo (News 1st) ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நூற்றுக்கு 48 வீதமான கட்டில்களை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆயுர்வேத வைத்தியசாலைகளில் 5,000 கட்டில்கள் காணப்படுவதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர், வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக இதுவரையில் 16 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,300 கட்டில்கள் மாத்திரம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.