by Staff Writer 08-09-2021 | 11:35 AM
Colombo (News 1st) வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரொன்றும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராயன்குளம் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும் இவர்களில் கெப் வாகனத்தில் பயணித்த 21 மற்றும் 44 வயதான இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.