94 இலட்சம் பேர் இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்

94 இலட்சம் பேர் இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் - இராணுவத் தளபதி

by Staff Writer 07-09-2021 | 2:01 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் தடுப்பூசியேற்றும் செயற்றிட்டத்தின் கீழ் 94 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை 27.2 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 94 இலட்சத்து 14,852 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தற்போது 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்