இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டன

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டன

by Staff Writer 07-09-2021 | 9:36 AM
Colombo (News 1st) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பளார், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், தற்போது அத்தியாவசியமான இருதய சத்திரசிகிச்சை மாத்திரமே இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 6,000 இற்கும் மேற்பட்டோர் இருதய சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைமையில், இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுவதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். கொவிட் 19 தொற்றுக்கு முன்னர் தேசிய வைத்தியசாலையில் வாரத்தில் 25 இற்கும் மேற்பட்ட இருதய சத்திரசிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது வாரத்தில் ஐந்து சத்திரசிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில், எவரேனும் இருதய சத்திரசிகிச்சைக்காக இந்த வருடத்தில் காத்திருப்பு பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவாராயின், அவருக்கான சத்திரசிகிச்சை 2023 ஆம் ஆண்டுக்கு பின்னரே நடைபெறும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.