எதிர்காலத்தில் உள்நாட்டு பசும்பால் மாத்திரமே பாவனையில் - மஹிந்தானந்த அளுத்கமகே

by Staff Writer 07-09-2021 | 3:11 PM
Colombo (News 1st) உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் இரண்டு தீர்மானங்களை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். உள்நாட்டு பசும்பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பது முதலாவது திட்டமாகும். அதற்காக தற்போது கால்நடை வளர்ப்பு அதிகார சபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை கையக்கப்படுத்தி கால்நடை வளர்ப்பு பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் காணிகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.