ஹிஷாலினி வழக்கு: ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் ஆஜர்

ஹிஷாலினி வழக்கு: ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் ஆஜர்

by Staff Writer 06-09-2021 | 2:09 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (06) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஹிஷாலினி எரிகாயங்களுடன் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கின் விசாரணைகளுக்காக அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்குடன் தொடர்புடைய ஐந்தாவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.