COVID மரணங்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்தது

by Staff Writer 06-09-2021 | 10:43 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. மேலும் 189 கொரோனா மரணங்கள் நேற்று (05) உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த மரணங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் இடம்பெற்றவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 96 ஆண்களும் 93 பெண்களும் அடங்குகின்றனர். அவர்களில் 154 பேர் 60 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்களாவர். இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 3,308 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4,62,023 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 67,515 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.