English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Sep, 2021 | 6:29 pm
Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் தாம் இணைய வழியில் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து துறைகளிலும் பெறப்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பிலான உண்மை நிலையை முழுமையாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கவுள்ளதாக G.L. பீரிஸ் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் தொடர்பில் அனைத்து நாடுகளும் தௌிவடைந்துள்ளதாகவும் அண்மையில் LTTE அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பங்காளிக்கட்சிகள் அடங்கலாக 5 கட்சிகள் இணைந்து மற்றுமொரு கடிதத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு தமது நிலைப்பாட்டினை தனித்து அறிவிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
13 Apr, 2022 | 09:46 AM
05 Mar, 2022 | 03:38 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS