மேலும் 4 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

by Bella Dalima 05-09-2021 | 1:23 PM
Colombo (News 1st) சீன தயாரிப்பிலான மேலும் 4 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன. சீனாவின் பீஜிங் நகரில் இருந்து இந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரே நாளில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அதிகூடிய தடுப்பூசி தொகை இதுவாகும். இந்த தடுப்பூசிகளுடன் நாட்டுக்கு கிடைத்துள்ள Sinopharm தடுப்பூசிகளின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாட்டில் நேற்று 1,80,062 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 1,27,03,070 பேர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்தது. இவர்களில் 91,37,887 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் Covishield-இன் இரண்டு தடுப்பூசிகளையும் 8,87, 295 பேரும் Sinopharm-இன் இரண்டு தடுப்பூசிகளையும் 73,18, 575 பேரும் பெற்றுக்கொண்டுள்ளனர். Sputnik-இன் இரண்டு தடுப்பூசிகளையும் 37,737 பேர் பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை, Pfizer-இன் இரண்டு தடுப்பூசிகளையும் 1,91,490 பேர் பெற்றுள்ளனர். அமெரிக்க தயாரிப்பான Moderna-வின் இரண்டு தடுப்பூசிகளையும் 7,02,790 பேர் பெற்றுக்கொண்டுள்ளனர்.