நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

எழுத்தாளர் Bella Dalima

05 Sep, 2021 | 10:38 am

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யக்கூடும் என அவர் தெரிவித்தார்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்