மேலும் 4,725 கொரோனா நோயாளர்கள் பதிவு

மேலும் 4,725 கொரோனா நோயாளர்கள் பதிவு

by Bella Dalima 04-09-2021 | 5:06 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 4,725 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,56,126 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 63,844 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, இன்று கொரோனா தொற்றில் இருந்து 2,310 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க, தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,82,476 ஆக அதிகரித்துள்ளது.