பொருளாதார மத்திய நிலையங்கள் நாளை (05) திறப்பு

by Bella Dalima 04-09-2021 | 8:10 PM
Colombo (News 1st) அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளையும் (05) நாளை மறுதினமும் (06) திறக்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டம் முழுவதும் வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு விவசாயிகள் தமது உற்பத்திகளை கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக மரக்கறிகளை நடமாடும் சேவையூடாக வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. இதனிடையே, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால், நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.