90,07,588 பேர் 2 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டனர்

நாட்டில் இதுவரை 90,07,588 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்

by Bella Dalima 04-09-2021 | 11:46 AM
Colombo (News 1st) தடுப்பூசியேற்றும் திட்டத்தின் கீழ் 2,37, 334 பேருக்கு நேற்று (03) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை 1,26 ,60, 231 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 90,07,588 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். Covishield-இன் இரண்டாவது தடுப்பூசியை 8, 86,644 பேரும், Sinopharm இரண்டாவது தடுப்பூசியை 72,01,537 பேரும் பெற்றுள்ளனர். Sputnik-இன் இரண்டாவது தடுப்பூசியை 33,231 பேர் பெற்றுக்கொண்டுள்ளனர். Pfizer இரண்டாவது தடுப்பூசியை 1,90,014 பேர் பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்க தயாரிப்பிலான Moderna-வின் இரண்டாவது தடுப்பூசியை 6,69,162 பேர் பெற்றுக்கொண்டுள்ளனர்.