கொரோனா தொற்றில் இருந்து 2,310 பேர் இன்று குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து 2,310 பேர் இன்று குணமடைந்தனர்

by Bella Dalima 04-09-2021 | 4:25 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து 2,310 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க நாட்டில் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,82,476 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 4,51,401 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 9,806 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.