English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
04 Sep, 2021 | 11:08 am
Colombo (News 1st) கொரோனா வைரஸ் சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,50,000-ஐ கடந்துள்ளது.
நேற்று 3,644 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,51,401 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் மேலும் 202 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மரணங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் (02) இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 113 பேர் ஆண்கள் என்பதுடன், 89 பேர் பெண்களாவர்.
அத்துடன், 60 வயதிற்கு மேற்பட்ட 155 பேர் COVID தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,80,166 ஆக அதிகரித்துள்ளது.
11 Jun, 2022 | 03:28 PM
14 Jan, 2022 | 05:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS