COVID மரணங்கள் 9,604 ஆக அதிகரிப்பு

COVID மரணங்கள் 9,604 ஆக அதிகரிப்பு

by Staff Writer 03-09-2021 | 10:28 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 204 கொரோனா மரணங்கள் உறுதி ​செய்யப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் (01) பதிவானவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. உயிரிழந்தவர்களில் 109 ஆண்களும் 95 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன், 30 வயதிற்கும் குறைந்த ஐவரும் அடங்குகின்றனர். இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று 3,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,47,757 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று 1952 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,78,168 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கொரோனா தொற்றுக்குள்ளாகிய 59,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.