பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது

by Staff Writer 03-09-2021 | 12:15 PM
Colombo (News 1st) பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிபாவ பகுதியில் பொது சுகாதார பரிசோதகரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அசோக்கபுர பகுதியை சேர்ந்த 24 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்கள் கல்கமுக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.