இந்தியாவில் உள்ள வௌிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு

இந்தியாவில் உள்ள வௌிநாட்டவர்களுக்கான விசா காலம் நீடிப்பு

by Bella Dalima 03-09-2021 | 3:42 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாத வௌிநாட்டவர்களுக்கான விசா செல்லுபடிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விசா நீடிக்கப்படுவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2020 மார்ச் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்கு சென்ற வௌிநாட்டவர்களின் விசா காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள வௌிநாட்டவர்களின் விசா காலம் ஏற்கனவே ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இம்மாதம் 30 ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.