by Bella Dalima 02-09-2021 | 6:14 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் தொடர்ச்சியாக தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுவதை மெகசின் சிறைக்காவலர்கள் அவதானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட தொலைபேசி மேலதிக சோதனைகளுக்காக புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.