மருதனார்மடம் சந்தியில் இளைஞர் மீது வாள்வெட்டு

மருதனார்மடம் சந்தியில் இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

by Bella Dalima 02-09-2021 | 11:11 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மருதனார்மடம் சந்தியில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காயமடைந்த 24 வயது இளைஞர் மீது ஏற்கனவே ஏனைய சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், மருதனார்மடம் சந்தியில் நேற்றிரவு மீண்டும் குறித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்