by Bella Dalima 02-09-2021 | 10:50 AM
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகோற்சவம் ஜூன் 10 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இம்மாதம 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இவ்வருட மகோற்சவத்தை நடத்தாமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவர் க.பரமலிங்கம் தெரிவித்தார்.