இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

by Bella Dalima 02-09-2021 | 5:52 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் தேவையான பாதுகாப்பு நடமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.