சரணடைந்த ஆவா குழு உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்

சுன்னாகம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட ஆவா குழு உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்

by Staff Writer 01-09-2021 | 9:31 PM
Colombo (News 1st) யாழ். சுன்னாகம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மூவரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த நிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இணுவில் பகுதியைச் சேர்ந்த 22, 28 மற்றும் 32 வயதான ஆவா குழு உறுப்பினர்களே இவ்வாறு சரணடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.