ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார் 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார் 

by Staff Writer 01-09-2021 | 5:34 PM
Colombo (News 1st) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரு வாரங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, வைத்தியசாலைக்கு சென்று விஜயலட்சுமியின் பூதவுடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.