CID இல் ஆஜராவதற்கு கால அவகாசம் வழங்குமாறு வைத்தியர் ஜயருவன் பண்டார கோரிக்கை

by Staff Writer 31-08-2021 | 1:19 PM
Colombo (News 1st) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்தியர் ஜயருவன் பண்டார முன்னிலையாவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு சட்டத்தரணிகள் இன்று (31) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஊடகவியலாளர் ஒருவர் நடத்திய நேர்காணலில் தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவித்ததாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விடயங்களை அறிந்துகொள்வதற்காக வைத்தியர் ஜயருவன் பண்டார இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அந்த விடயம் தொடர்பில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய வைத்தியர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.