மழையுடனான வானிலையால் டெங்கு பரவும் அபாயம்

மழையுடனான வானிலையால் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம்

by Staff Writer 31-08-2021 | 1:26 PM
Colombo (News 1st) மழையுடனான வானிலையுடன் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துச் செல்வதற்கான அபாய நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகவே, அனைவரும் தமது வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் லக்‌ஷ்மி சோமதுங்க வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செயற்படாத பட்சத்தில் கொரோனா தொற்றுடன் டெங்கு காய்ச்சலும் அதிகரிக்குமென அவர் தெரிவித்துள்ளார்.