போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

by Staff Writer 31-08-2021 | 12:31 PM
Colombo (News 1st) சீதுவ - லியனகேமுல்ல மற்றும் அங்கன்பிட்டிய பகுதிகளில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 602 போலி 500 ரூபா நாணயத்தாள்கள், நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய கணினி, அச்சு இயந்திரம், 03 கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கம்பஹா, வேயங்கொடை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 21, 43 மற்றும் 45 வயதான மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. லியனகேமுல்ல பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 2 சந்தேகநபர்களை சோதனைக்குட்படுத்திய போது 60 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.