பின்னவல யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானை குட்டிகள் பிறந்தன

by Staff Writer 31-08-2021 | 5:38 PM
Colombo (News 1st) பின்னவல யானைகள் சரணாலயத்தில் சுரங்கி எனும் யானை இன்று (31) இரட்டை யானை குட்டிகளை ஈன்றுள்ளது. 24 வயதான 'சுரங்கி' எனும் யானைக்கே இவ்வாறு இரட்டை யானை குட்டிகள் பிறந்துள்ளதாக பின்னவல யானைகள் சரணாலயம் தெரிவித்துள்ளது. பின்னவல யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானை குட்டிகள் பிறக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 1996 ஆம் ஆண்டு திருகோணமலை - சுரங்கல்கம பகுதியில் பிறந்த குறித்த யானை, 1997 ஆம் ஆண்டு பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், 2009 ஆம் ஆண்டு கனக்க எனும் யானை குட்டியை ஈன்றது. தற்போது சுரங்கி யானை மற்றும் குட்டி யானைகள் ஆகியன ஆரோக்கியமாக உள்ளதாக சரணாலயத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.