தினேஷ் பிரியந்தவிற்கு பதவி உயர்வு

தாய் நாட்டை தங்கப் பதக்கத்தால் அலங்கரித்த தினேஷ் பிரியந்தவிற்கு பதவி உயர்வு

by Staff Writer 30-08-2021 | 8:15 PM
Colombo (News 1st) தாய் நாட்டை தங்கப்பதக்கத்தால் அலங்கரித்த இராணுவ வீரரான தினேஷ் பிரியந்த இன்று (30) அதிகாரமளிக்கப்பட்ட முதல்தர அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் இந்த பதவி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார். தினேஷ் பிரியந்த ஹேரத், பராலிம்பிக் விளையாட்டு விழாவில் F46 ஈட்டி எறிதலின் ஆடவர் பிரிவில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி, முதல் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.