ஆப்கானிலிருந்து 66 இலங்கையர்கள் வௌியேற்றப்பட்டனர் 

ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 66 இலங்கையர்கள் வௌியேற்றப்பட்டனர் 

by Staff Writer 30-08-2021 | 4:21 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 66 இலங்கையர்கள் வௌியேற்றப்பட்டுள்ளதாக வௌவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 7 இலங்கையர்களை மாத்திரமே அங்கிருந்து வௌியேற்ற வேண்டியுள்ளதாக வௌவிவகார அமைச்சு அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது. மேலும் 21 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருக்க தீர்மானித்துள்ளனர்.