by Staff Writer 30-08-2021 | 10:26 PM
Colombo (News 1st) அரிசி, நெல், சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களை பதுக்கிவைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகம் தொடர்பான அவசர சட்ட விதிமுறைகள் இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.