Colombo (News 1st) நாட்டில் மேலும் 192 கொவிட் மரணங்கள் அறிவிக்கப்பட்டன.
இவர்களில் 109 ஆண்களும் 83 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மரணங்கள் நேற்றைய தினம் (28) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்றைய தினம் (29) 4,612 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
