காபூல் விமான நிலையம் மீது மீள தாக்குதல் -அமெரிக்கா

காபூல் விமான நிலையம் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் - அமெரிக்க ஜனாதிபதி

by Staff Writer 29-08-2021 | 11:02 AM
Colombo (News 1st) காபூல் விமான நிலையத்தை இலக்குவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பிட்ட அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தமது நாட்டு பிரஜைகளை வௌியேறுமாறு அமெரிக்க வௌிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. காபூல் விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 170 பேர் கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் காபூல் தாக்குதலை திட்டமிட்ட ஐஎஸ் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதை நம்புவதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தை இலக்குவைத்து மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.